சோளக்காட்டுச் சொக்கன் [புதன் பந்தல் #11]

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 04 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கவிஞர் கலீல் ஜிப்ரானின் எழுத்துக்களில் அழகிய உணர்வுகள் மென்மையாக பதியப்பட்டிருக்கும். கவிதையானாலும் குட்டிக்கதையானாலும், மனித இயல்பின் அம்சங்களை தொட்டுச் செல்வதாய் செய்யப்பட்டிருக்கும். 1918இல் அல்பிரட் ஏ. நொஃபினால் வெளியிடப்பட்ட கலீல் ஜிப்ரானின் “கிறுக்கன்” (The Madman) என்ற நூலில் இடம்பெற்ற அத்தனை கவிதைகளும் கதைகளும் ஆழமான விடயங்களை அழகான அழகியலாகச் சொல்லிச் செல்லும். வாசிக்கும் ஒவ்வொரு தருணமும் மனிதன் சார்பான அற்புதமான புரிதல்களையும் [...]

தேர்ந்தெடுத்தல் [புதன் பந்தல் - 09.11.2011] #10

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 02 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், எண்ணங்களின் தெரிவு பற்றி சொல்கிறது. “ஒருவன் தனது மனப்பாங்கினை மாற்றிக் கொள்வதன் மூலம், அவனின் வாழ்க்கையையும் மாற்றிவிடக்கூடிய ஆற்றல்தான், மனிதகுலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்,” என்று 1900களில் எழுதிய நவீன உளவியலின் தந்தை என வர்ணிக்கப்படும் வில்லியம் ஜேம்ஸ் ஒரு தடவை குறிப்பிட்டார். மனப்பாங்கென்பது, எமது எண்ணங்களின் வடிவம். மனதில் கொண்ட எண்ணங்கள்தான் வாழ்வின் செயல்களாய் வடிவம் பெறுகிறது. [...]

எண்ணங்களின் எதிரொலி [புதன் பந்தல் - 26.10.2011] #9

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், வாழ்க்கையில் எண்ணங்களினதும் செயல்களினதும் ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்கிறது. சிலவேளைகளில் நீங்கள் இந்தக் கதையை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனாலும், வாழ்வின் மீதான மீள்பார்வைக்கு இது தேவையானது என்பதால் அதைச் சொல்லலாமென எண்ணினேன். அப்பாவுடன், ஒரு பையன் மலைகளை கண்டு வியந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு பயணிக்கிறான். மலையின் மேல் நோக்கி, நடந்து செல்கையில், அந்தப் பையன் தவறி, திடீரென [...]

மறந்துபோன பெறுமதி [புதன் பந்தல் - 19.10.2011] #8

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 10 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், மனிதன் மறந்துபோன அவனின் பெறுமதியைப் பற்றிச் சொல்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்னர், நான் கேள்விப்பட்ட ஒரு கதையோடு, பதிவை தொடரலாமென எண்ணினேன். அதுவே இப்பதிவாயிற்று. ஒரு சுயமுன்னேற்ற பயிற்சிப் பட்டறையின் போது, ஒரு பிரபல்யமான சொற்பொழிவாளர், தனது சொற்பொழிவின் போது, திடீரென தனது சட்டைப்பைக்குள் இருந்து 100 ரூபா பெறுமதியான நோட்டை எடுத்து, அவையில் அமர்ந்திருந்தோரிடம் காட்டி, [...]

படிப்பித்தல் [புதன் பந்தல் - 12.10.2011] #7

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 15 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், கற்றலையும் கற்பித்தலையும் பொதுவான மனித உணர்வின் வெளிப்பாட்டிலிருந்து நோக்குகிறது. காரிருள் சூழ்ந்த நிலையில், திடீரென பெய்யென பெய்யும் மழைபோலே, நாம் வாழ்கின்ற சூழல் பற்றியதான எமது பார்வைகள் விழித்துக்கொள்தல் நடைபெறுவதுண்டு. அவை எல்லாமும் நாம் சூழல் சார்பாகக் கொண்டுள்ள புரிதலின் வெளிப்பாடாக இருப்பதும் இன்னொரு அழகு. எல்லோரிடமும் “தாங்கள் உயர்வானவர்கள்” என்ற, குறைந்தது மெல்லியதான அல்லது அதிகபட்ச [...]

கணகாட்டும் கக்கிசமும் [புதன் பந்தல் - 05.10.2011] #6

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 51 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், அவஸ்தைகள் தரும் அழகிய பாடங்கள் பற்றிய விடயத்தைச் சொல்கிறது. இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக்கூடும். ஆனாலும், மீள ஞாபகப்படுத்துவது உசிதமானதாகத் தோன்றியது. அதுவொரு காலைப்பொழுது, பள்ளிக்கூடத்தில், வாத்தியார் பிள்ளைகளுக்கு உயிர்களின் தோற்றம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். “மயிர்க்கொட்டியொன்று, வண்ணத்துப்பூச்சியாகும் தருணத்தை நீங்கள் கண்டதுண்டா?” மாணவர்களை நோக்கி ஆவலாய் கேள்வி கேட்கிறார் வாத்தியார். மௌனம் அப்பொழுதை அலங்கரிக்கிறது. “இந்த [...]

கலையக ஒலி [புதன் பந்தல் - 28.09.2011] #5

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 12 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், ஒலி என்கின்ற சத்தத்தைப் பற்றி விசாரிக்கின்றது. நிறத்தில் ஏற்கனவே, சத்தங்கள் எல்லாம் இனிமையானதா? என்ற பதிவின் மூலம் சத்தங்களின் வெவ்வேறு வடிவங்களும் அவற்றின் சூழல் விளைவுகளைப் பற்றிப் பேசியிருப்பேன். தொடர்ந்து வரும் காணொளி காணுங்கள். கலையகமொன்றில் நடந்தேறும் சம்பவங்கள், அவை இடம்பெறுகின்ற போது தோன்றுகின்ற ஒலிகள் என இரண்டையும் ஒரு சேரக்கலந்து, ஆனந்தமான அனுபவமாகத் தர ஒரு குழுவிற்கு முடிந்திருக்கிறது. [...]

உதவி: அளவுகளைத் தாண்டியது [புதன் பந்தல் - 21.09.2011] #4

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 41 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், மாறுதல்கள் ஏற்படுத்துதல் பற்றிய விடயத்தை நட்சத்திரமீன்களின் கதையோடு ஆய்கிறது. காலை நேரத்தின் கடற்கரைக்கு அற்புதமான தோற்றச்சூழல் கிடைக்கும். அப்படியொரு காலைப்பொழுதில் கடற்கரை வழியாக உடற்பயிற்சி செய்யும் நோக்கில் நடந்து செல்கின்றான் ஒருவன். அவன் செல்லும் வழியாக நூற்றுக்கணக்கான நட்சத்திரமீன்கள் (Star Fish) கரையொதுங்கியிருப்பதை அவதானிக்கிறான். உயிரோடு கரையொதுங்கியிருக்கும் அந்த மீன்கள், காலைநேரக் கதிரவனின் சூட்டினால் அவை இறந்துவிடக்கூடும் என்ற எண்ணம் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 531 other followers