(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 54 செக்கன்கள் தேவைப்படும்.) [?]
உலகின் பல துறைகளில் புரட்சிகள் செய்த, அண்மையில் உயிர்நீத்த ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றிய விடயங்கள், சாதனைகள், அணுகுகைகள் என பல விடயங்களும் இன்னும் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
1994ஆம் ஆண்டு, ஸ்டீவ் ஜொப்ஸ் வழங்கிய ஒரு இன்னும் ஒளிபரப்பப்படாத பேட்டியில் வாழ்வியலின் மிக ஆழமான உண்மைகள் பலதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அந்தப் பேட்டியில் சொன்ன பலவற்றில் ‘அந்த ஒரு விடயத்தை’ நிறத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நான் நினைத்தேன். அதுவே இப்பதிவாயிற்று.
“நீங்கள் வளர்ந்து வருகின்ற போது, உலகம் இப்படித்தான் இருக்கும் அதற்குள்ளேயே நாம் வாழ வேண்டுமெனவும் தடைகளைக் கூட ஆர்வத்தோடு எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டுமெனவும் உங்களிடம் சொல்லப்பட்டிருக்கும். நல்லதொரு குடும்பம் அதனோடிணைந்த மகிழ்ச்சி — இன்னும் கொஞ்சம் சேமித்து வைத்த பணம் என்பவைதான் வாழ்க்கை என வரைவிலக்கணம் உங்களிடம் சொல்லப்பட்டிருக்கும்.
அது வரையறுக்கப்பட்ட வாழ்க்கை. ஆனால், ஒரேயொரு விடயத்தை நீங்கள் உணர்ந்து கொண்டால், வாழ்க்கை விசாலமானதென்பதை நீங்கள் உணர்வீர்கள்: உலகம் என்று நீங்கள் சொல்கின்ற அனைத்தும் மக்களால் உருவாக்கப்பட்டவை — உங்களைவிட அவ்வளவு திறமையில்லாமலேயே அவர்கள் உருவாக்கினார்கள். நீங்கள் அவற்றை மாற்றலாம். அவற்றில் நீங்கள் ஆதிக்கம் செலுத்தலாம். உங்களுக்குத் தேவையான மற்றவர்கள் பாவிக்கக் கூடிய வகையான விடயங்களை நீங்கள் உருவாக்கலாம்.
இதை நீங்கள் கற்றுக் கொள்கின்ற நிலையில், நீங்கள் என்றுமே புதுமைகள் செய்யும் உன்னதமானவராவீர்கள்.”
ஸ்டீவ் ஜொப்ஸ் இவற்றைச் சொல்கின்ற காணொளி இது:
.
- உதய தாரகை
Filed under: அதிசயம்,அனுபவம்,இணையம்,இயற்கை,உலகம்,எண்ணம்,கட்டுரை,சுவாரஸ்யம்,செய்தி,மேற்கோள்,வாழ்க்கை குறிச்சொற்கள்: | ஸ்டீவ் ஜொப்ஸ்







