ஐந்தாவது வருடமும் ஓர் அனுபவக் குறிப்பும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) நாம் வாழுகின்ற இந்தக் காலம் அதிகம் அழகுடையது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு காலத்திற்கும் அதற்கேயுரிய தனித்துவமான பண்புகள் விரிந்து கிடப்பது போல், இந்தக் காலத்திற்கும் அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களை தொழில்நுட்பம் மட்டுந்தான் ஏற்படுத்தித் தந்துள்ளதென்றால், அது பிழையென்று சொல்வேன். மாற்றங்களை நேசிப்பதற்கும், அந்த மாற்றங்களின் பால் உண்டாகும் விடயங்களை தன் சார்பான நிலையில் வைத்து கணித்து வாழ்தலின் அழகை ரசிப்பதற்கும் பழகியுள்ள [...]

எங்கே தப்பியோடுவது?

(இந்தப் பதிவை வாசிக்க 1 நிமிடம் தேவைப்படும்.) சிலவேளைகளில், நான் சொல்ல நினைப்பதை அப்படியே வார்த்தைகளில் கொண்டுவர முடிவதில்லை. அப்படியே கொண்டு வந்த போதிலும், அதன்பால் கொண்டுள்ள அந்த உணர்வுகளை அது உசுப்பிவிடுவதுமில்லை. எண்ணங்களில் தோன்றும் அதிசயமான உணர்வுப் பிரவாகங்கள்தான் உலகத்தின் இருத்தலின் ஆதாரம் என்று கூட நான் நினைப்பதுண்டு. சிலவேளைகளில், இன்னொருவரின் பாடல், முற்றிலும் அந்நியமானவரின் பேச்சு அல்லது காட்சிகளை கோர்த்துக் காட்டும் நிழற்படம் என்பன நான் சொல்ல நினைக்கும் அந்த விடயத்தை அப்படியே சொல்லிப் [...]

வாசிக்கத் தேவையான நேரம் என்ன?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) அண்மையில் எனது வலைப்பதிவிற்கு நீங்கள் வருகை தந்திருப்பீர்களாயின், புதியதொரு மாற்றமொன்றை அவதானித்திருப்பீர்கள். பலரும் இந்த மாற்றத்தை அவதானித்து, இதை எப்படி செய்தீர்கள்? அருமையாய் இருக்கிறதே என்றெல்லாம் மறுமொழி, மின்னஞ்சல் என்பன மூலம் சொல்லி அனுப்பியிருந்தார்கள். அந்த புதிய விடயமென்ன? அதன் நன்மைகள் என்ன? அதனை எவ்வாறு செய்தேன்? அதற்கான காரணங்கள் என்ன? நீங்கள் அதனை உங்கள் வலைப்பதிவிற்கு எவ்வாறு செய்து கொள்ளலாம் என்பன பற்றி [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 531 other followers