ஒலிகள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவே திகழ்கின்றன. உலகிலுள்ள எல்லா விடயங்களுக்குமே அவை ஒவ்வொன்றுடனும் இணைந்த வகையில் தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. ஒலியும் அவ்வாறுதான். மொட்டுக்கள் விரிந்து பூவாகும் போது கேட்கும் ஓசை தனித்துவமானது. உயிர்களின் உணர்வுகள் கொண்ட இன்னொரு வடிவம் தான் ஓசை – ஒலி. ஒலி என்பது எதேச்சையாக தோன்றிவிடுவதில்லை. அதிர்வுகளின் ஒன்றுகூடலால் உதயமாவதே ஒலியாகும். அதிர்வுகள் எல்லாம் ஒலியை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு நிறைய உடன்பாடு உண்டு. மௌனத்திலும் ஒலியிருக்கிறது [...]
Filed under: அனுபவம்,இயற்கை,உலகம்,கட்டுரை,சுவாரஸ்யம்,செய்தி,தொழில்நுட்பம்,புதியவை,மேற்கோள் | 1 மறுமொழி »







